இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று (20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 23 அன்று அபுதாபியில் பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 26 அன்று துபாயில் இந்தியாவுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
Sports