பத்தேகம பொலிஸ் பிரிவில் எத்கந்துர பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான மூவரும் 21,33 மற்றும் 41 வயதுடைய படபொல மற்றும் எத்கந்துர பிரதேசங்ளைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி இரவு எத்கந்துர பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags
Sri Lanka