முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

 

முச்சக்கர வண்டியொன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (08) பிற்பகல் ராகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

சந்தேகநபர் 26 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவராவார். 

சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், 04.06.2025 அன்று ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, 1,800,000/= ரூபா பெறுமதியுடைய முச்சக்கர வண்டியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இவரென்பது தெரியவந்தது. 

திருடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form